பிரான்சில் இயற்கை பேணும் நகராகப் பராமரிக்கப்படும் "த்றுவா" (Troyes)
பிரான்சில் தொன்மையான மரக்காற்றாலை
ஈழத்தில் சூத்திரக்கிணறு
ஐரோப்பியத் தலைநகரங்கள் எப்போதும் கட்டிடக் காடுகள்தான். பிரமாண்டமான கண்ணாடிச்சுவர்கள் தூசித்துணுக்குகள் நிறைந்தவைதான். பிரான்ஸின் தலைநகரமான பாரிஸ் தவிர்ந்த ஏனைய நகரங்கள், கிராமங்களுக்கு செல்லும் பொழுது தென்படும் மருத நிலங்களும், முல்லை நிலங்களும், குறிஞ்சி நிலங்களும் தரும் செழுமையான காட்சிகளில் மனம் ஆறுதல் கொள்கிறது இன்னும் எமக்கான இயற்கை இப்பூமியில் எஞ்சியுள்ளதென எண்ணி. மறுபுறம் அதையும் மீறி எஞ்சியுள்ள வளமான நிலங்கள், இன்னும் எவ்வளவு காலங்களுக்கு வாழப்போகின்றன என எண்ணி மனம் பதட்டமடையவும் வைக்கிறது.
பாரிஸ் தலைநகரத்தில் தமிழர்களின் வர்த்தக மையங்கள் செறிந்து காணப்படும் "லாச்சப்பல் - La Chapelle" பிரதேசத்தில் "காக்கை சிறகினிலே" சஞ்சிகை குழும நண்பரை சந்தித்தேன். "மாலு பாண்" Fish bun சாப்பிடுவதற்காக "Hot breads Paris "பாண் வெதுப்பகத்திற்குள் நுழைந்தோம். பாண்டிச்சேரியை பூர்வீகமான உரிமையாளரின் வெதுப்பகம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்குவதோடு தனக்கான ஓர் தனித்துவத்தை பெற்றுள்ளது பல தேசிய மக்களிடத்தே. உள்ளே அமர்ந்து உண்ணுகையில் சுவரில் குகையோவிய வர்ணங்களை ஒத்த - பாணின் சரிதை பற்றிய ஓவியங்கள் சுவரில் பரந்திருந்தன. இயற்கை, விவசாயம், ஊட்டச் சத்துள்ள உணவுகளின் முக்கியத்துவம், மானிட வாழ்வியலின் இருத்தலை ஒரு கணத்தில் ஞாபகமூட்டின. சுவரோவியத்தில் மரத்தாலான காற்றாலையை கண்டதும் சென்ற சில மாதங்களுக்கு முன் தரிசித்த இன்றும் இயங்கு நிலையில் உள்ள மரக்காற்றாலை பற்றியும் "த்றுவா" (Troyes) நகரம் பற்றியும் வளவளாவினோம் - சீனி போடாமல் தேநீர் அருந்தியபடி.
பாரிஸில் இருந்து தென்கிழக்கே 200 கி.மீ.. தொலைவில் உள்ளது "த்றுவா" (Troyes) எனும் இடம், பிரான்சில் காற்றினால் இயங்கும் நவீன காற்றாலைகள் அதிகம் காணப்படும் விவசாய நகரமாகும். மண்ணின் வளம், காற்றின் சுத்தம், மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள், விவசாயிகளின் ஊக்கம் என ஒரு செழிப்பான மண்ணிற்கே உரிய பண்பாட்டை காணலாம். பிரான்ஸில் இரண்டு உலக யுத்தங்கள் நடந்தேறிய பிறகும் மீண்டெழுவதற்கு மிக முக்கிய காரணிகளில் விவசாயம் முன்னிடம். பல நூற்றாண்டுகளாக விவசாய வளர்ச்சி, அதன் நீட்சியாக வர்த்தக வளர்ச்சி, அதன் பெறுபேறாக பக்கத்து நகரங்களின் வருகை, அண்டை நாடுகளின் வருகை, பண்டமாற்று என ஆண்டாண்டு காலமாக செழித்து வளர்ந்த தனித்துவத்தைப் பேணுகிறது "த்றுவா" நகரம்.
நகர வரலாற்றை முன்னிறுத்தி அனிமேஷன் விவரணப்படம், தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்கள், அங்கு வாழ்ந்த மிருகங்கள், ஆதி மனிதர்களின் எலும்புக்கூடுகள், புகைப்படங்கள், வரலாற்று ஓவியங்கள், நாகரிக வரலாற்றுக் கதைகளையும் அங்கிருந்த அருங்காட்சியகம் பாதுகாக்கிறது - நமக்காக. மனித நாகரிகத்தின் படிமங்களை சேகரிப்பது, பாதுகாப்பது அடுத்த சந்ததியினருக்குக் கையளிப்பது பிரான்சில் பழக்கத்தில் உள்ள பெறுமதியான நடைமுறையாகும். அருங்காட்சியகத்திலிருந்து வெளிவருகையில் - இயற்கைச்சூழலை பாதுகாத்தல், கர்ப்பிணித் தாய்மார், கருவுறும் சிசுக்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளின் முக்கியத்துவம், விவசாயம், சுத்தமான நீர், இலவசமாக சுவாசிக்கும் காற்று, உலகமயமாதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகை, அகதிகளின் வாழ்வியல், சுதந்திரமான உரையாடல், பிரான்சில் நடைபெறும் மஞ்சள் சட்டைப் போராட்டம் Gilets Jaunes, போன்றன மனதில் ஒரு நொடி ஊ(ஞ்)சலாடி - மானிட வாழ்வியலின் இருத்தலை நினைவூட்டின.
பாரிஸில் இருந்து தென்கிழக்கே 200 கி.மீ.. தொலைவில் உள்ளது "த்றுவா" (Troyes) எனும் இடம், பிரான்சில் காற்றினால் இயங்கும் நவீன காற்றாலைகள் அதிகம் காணப்படும் விவசாய நகரமாகும். மண்ணின் வளம், காற்றின் சுத்தம், மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள், விவசாயிகளின் ஊக்கம் என ஒரு செழிப்பான மண்ணிற்கே உரிய பண்பாட்டை காணலாம். பிரான்ஸில் இரண்டு உலக யுத்தங்கள் நடந்தேறிய பிறகும் மீண்டெழுவதற்கு மிக முக்கிய காரணிகளில் விவசாயம் முன்னிடம். பல நூற்றாண்டுகளாக விவசாய வளர்ச்சி, அதன் நீட்சியாக வர்த்தக வளர்ச்சி, அதன் பெறுபேறாக பக்கத்து நகரங்களின் வருகை, அண்டை நாடுகளின் வருகை, பண்டமாற்று என ஆண்டாண்டு காலமாக செழித்து வளர்ந்த தனித்துவத்தைப் பேணுகிறது "த்றுவா" நகரம்.
நகர வரலாற்றை முன்னிறுத்தி அனிமேஷன் விவரணப்படம், தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்கள், அங்கு வாழ்ந்த மிருகங்கள், ஆதி மனிதர்களின் எலும்புக்கூடுகள், புகைப்படங்கள், வரலாற்று ஓவியங்கள், நாகரிக வரலாற்றுக் கதைகளையும் அங்கிருந்த அருங்காட்சியகம் பாதுகாக்கிறது - நமக்காக. மனித நாகரிகத்தின் படிமங்களை சேகரிப்பது, பாதுகாப்பது அடுத்த சந்ததியினருக்குக் கையளிப்பது பிரான்சில் பழக்கத்தில் உள்ள பெறுமதியான நடைமுறையாகும். அருங்காட்சியகத்திலிருந்து வெளிவருகையில் - இயற்கைச்சூழலை பாதுகாத்தல், கர்ப்பிணித் தாய்மார், கருவுறும் சிசுக்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளின் முக்கியத்துவம், விவசாயம், சுத்தமான நீர், இலவசமாக சுவாசிக்கும் காற்று, உலகமயமாதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகை, அகதிகளின் வாழ்வியல், சுதந்திரமான உரையாடல், பிரான்சில் நடைபெறும் மஞ்சள் சட்டைப் போராட்டம் Gilets Jaunes, போன்றன மனதில் ஒரு நொடி ஊ(ஞ்)சலாடி - மானிட வாழ்வியலின் இருத்தலை நினைவூட்டின.
|
தனித்துவ அழகியல்களைப் பிரதிபலிக்கும் 16ம் நூற்றாண்டு கத்தோலிக்க - தலைமைத் தேவாலயம் Cathédrale, தேவாலயங்கள் Churches, மண்ணும் மரமுமாக கட்டப்பட்ட கட்டிடக்கலை, கண்ணாடிச் சிற்பங்கள், தொல்பொருள் அருங்காட்சியகங்கள், ஓவியக் காட்சியகங்கள், காட்டு மிருகங்கள் வாழும் பாதுகாப்பு வனம், தேனீ வளர்க்கும் தோட்டங்கள், அழகான ஏரி, படகுப் பயணம், அத்தோடு பழமைத் தொழில்நுட்பத்திலான நகரும் மரக்காற்றாலை (Le Moulin-à-Vent) எனக்காணக் கிடைத்தன அங்கே. இவற்றை முறையாகப் பட்டியலிட்ட சுற்றுலாத் துண்டறிக்கை வழி நாட்கள் நகர்ந்தன.
கடைசி நாளன்று நகரும் மரக்காற்றாலையை பார்க்கும் ஆர்வத்துடன் மதிய உணவருந்தி பயணத்தைத் தொடர்ந்தேன் - மகிழுந்து இதமான வேகத்தில். மாலை நேரச் சூரியன் மேற்கிலிருந்து வானை மஞ்சள் பூசிக்கொண்டிருந்தான். சாம்பலும் தங்க நிற துணுக்குகளும் கலந்த அந்த வளமான தோட்ட மண்ணை மினுமினுங்க வைக்கும் காட்சி ஓவியர் 'வான்கோவின்' Vincent Van Gogh 1853 -1890 ஓவியங்களை படம் போட்டன. சூரியக் கதிர்களும் – இறுங்குக் கதிர்களும் வான்கோவின் பாடுபொருட்கள். எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வளமான மினுங்கும் தோட்ட மண்ணைத் தொட்டு விரல்களால் வருடினேன். நிமிர்ந்து நின்று வானைத்தொடும் தோட்டத்தின் எல்லையை தேடிக்கொண்டு அதன் செழுமையில் மெய்மறந்தேன். கதிரவன் கண்ணைப்பறிக்க, கண் சிமிட்டி குனிந்து ஒரு பிடி மண்ணை எடுத்து பத்திரமாக எனது பையில் சேகரித்தேன். அந்த மருத மண்ணிற்கே உரித்தான மண்வாசனை காற்றில் மிதந்தன. நான் பிறந்த மருதநில மண்ணின் நினைவுகளை ஒரு நிமிடம் அசைபோட்டது எனது மனம். |
நகரும் மரக்காற்றாலையை - Le Moulin de Dosches அண்மிக்கும் வேளையில் எனது மகிழுந்தை கொஞ்சம் தொலைவிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று. இந்த முறைமை அவ்விடத்தின் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். மீதித் தூரத்தை புற்களும் செடிகளும் மரங்களும் நிறைந்த பாதையில் நடந்து செல்கையில் இருமருங்கிலும் வெவ்வேறுபட்ட மரங்கள் வரிசையில் நடப்பட்டிருந்தன. அந்த மரங்களின் அருகில் இருந்த பெயர்ப்பலகையில் எழுதப்பட்டிருந்த மரங்களின் பெயரை வாசித்த வண்ணம் எங்கும் படர்ந்த பலவித பச்சை வர்ணத்தை ரசித்தபடி, பையப் பைய....
பல நூறு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட விசை ஆலைகள் - காற்றினாலும், மனித வலுவினாலும், விலங்குகளினாலும், நீரோட்ட விசையினாலும் இயங்கின. இவற்றில் காற்றினால் இயங்கும் ஆலைகள் மேற்கு நாடுகளில் பிரசித்தி பெற்றவை. வட்ட வடிவமான சுவரை எழுப்பி அதன் உச்சியில் மரம் அல்லது பிரம்பினால் மூன்று அல்லது நான்கு அல்லது ஆறு இறக்கைகளைக் கொண்ட விசிறிகளின் சுழல் விசை மூலம் இயங்கும் காற்றாலைகள் பழமையானவை. இன்று அலுமினியத்தால் ஆன மூன்று இறக்கைகள் கொண்ட விசிறிகள் மூலம் இயங்கும் காற்றாலைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. புதியவை பருமனில் பன்மடங்கு பெரியவை. இவை பழையவற்றிலும் பார்க்க மிக உயரமானவையும் கூட. உயரம் அதிகரிக்க காற்றின் விசையும் அதிகரிக்கும். பல்வேறு வடிவங்களைக் கொண்ட இவ்வகையான காற்றாலைகள் பலதரப்பட்ட மனித தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
நடந்து செல்கையில் சற்று தூரத்திலேயே நகரும் மரக் காற்றாலையின் கம்பீரமாகத் தென்பட்டது அழகிய பூந்தோட்டங்களின் நடுவே. அதன் முழு உருவமும் மரத்தினால் ஆக்கப்பட்டு ஒட்டுமொத்த ஆலையும் நிலத்தில் பிரத்தியேகமாகப் பூட்டப்பட்டிருந்த இன்னொரு பெரிய சக்கரத்தில் சுழலும் வண்ணம் பொறியியல் செயற்பாடுகளின் நேர்த்தியையும் தேர்ச்சியையும் பழமையின் வலிமையையும் கண்டுகொண்டேன். 16ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இவ்வாலை 28 தொன் எடையுடன் இன்றும் இயங்கும் நிலையில். காற்று எத்திசைக்கு வீசினாலும் அதற்கேற்ப ஆலையை இரு மனித வலுக்கொண்டு திருப்ப முடியும். பிரான்சிலுள்ள நகரும் மரக் காற்றாலைகளில் இது மிக முக்கியமானதாம். இதன் உரிமையாளர் இந்த ஆலைக்கு அருகாமையில் பண்டைய பாண் வெதுப்பகமும், களஞ்சியமும், இறுங்கிலிருந்து பாண் எவ்வாறு தயாரித்தார்கள் என்பதை விபரணப்படுத்தும் காட்சியரங்கமும் அமைத்துள்ளார்.
பல நூறு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட விசை ஆலைகள் - காற்றினாலும், மனித வலுவினாலும், விலங்குகளினாலும், நீரோட்ட விசையினாலும் இயங்கின. இவற்றில் காற்றினால் இயங்கும் ஆலைகள் மேற்கு நாடுகளில் பிரசித்தி பெற்றவை. வட்ட வடிவமான சுவரை எழுப்பி அதன் உச்சியில் மரம் அல்லது பிரம்பினால் மூன்று அல்லது நான்கு அல்லது ஆறு இறக்கைகளைக் கொண்ட விசிறிகளின் சுழல் விசை மூலம் இயங்கும் காற்றாலைகள் பழமையானவை. இன்று அலுமினியத்தால் ஆன மூன்று இறக்கைகள் கொண்ட விசிறிகள் மூலம் இயங்கும் காற்றாலைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. புதியவை பருமனில் பன்மடங்கு பெரியவை. இவை பழையவற்றிலும் பார்க்க மிக உயரமானவையும் கூட. உயரம் அதிகரிக்க காற்றின் விசையும் அதிகரிக்கும். பல்வேறு வடிவங்களைக் கொண்ட இவ்வகையான காற்றாலைகள் பலதரப்பட்ட மனித தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
நடந்து செல்கையில் சற்று தூரத்திலேயே நகரும் மரக் காற்றாலையின் கம்பீரமாகத் தென்பட்டது அழகிய பூந்தோட்டங்களின் நடுவே. அதன் முழு உருவமும் மரத்தினால் ஆக்கப்பட்டு ஒட்டுமொத்த ஆலையும் நிலத்தில் பிரத்தியேகமாகப் பூட்டப்பட்டிருந்த இன்னொரு பெரிய சக்கரத்தில் சுழலும் வண்ணம் பொறியியல் செயற்பாடுகளின் நேர்த்தியையும் தேர்ச்சியையும் பழமையின் வலிமையையும் கண்டுகொண்டேன். 16ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இவ்வாலை 28 தொன் எடையுடன் இன்றும் இயங்கும் நிலையில். காற்று எத்திசைக்கு வீசினாலும் அதற்கேற்ப ஆலையை இரு மனித வலுக்கொண்டு திருப்ப முடியும். பிரான்சிலுள்ள நகரும் மரக் காற்றாலைகளில் இது மிக முக்கியமானதாம். இதன் உரிமையாளர் இந்த ஆலைக்கு அருகாமையில் பண்டைய பாண் வெதுப்பகமும், களஞ்சியமும், இறுங்கிலிருந்து பாண் எவ்வாறு தயாரித்தார்கள் என்பதை விபரணப்படுத்தும் காட்சியரங்கமும் அமைத்துள்ளார்.
பாணின் சரிதையை அறிந்து நகருகையில் இதைச் சூழவுள்ள தோட்டத்தில் ஐரோப்பிய மற்றும் மத்திய தரைக் கடலை அண்டிய மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு அதற்கான விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதைக்காண வரும் மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், விவசாயிகள் வெளிப்படுத்தும் உற்சாக உணர்வுகள் நாம் இதனைப்பார்க்கக் கொடுத்த நுழைவுச் சீட்டின் பெறுமதியை மீறியதாக உணர வைத்தன. அச்சூழலின் காட்சிகளும், நறுமணமும் அமைதியும் என்னை மீண்டும் ஒரு நிமிடம் நான் பிறந்த இடமான இயற்கை மரங்களும், நெல் வயல்களும், மரக்கறித்தோட்டங்களும், கலைஞர்களும், கல்விமான்களும் நிறைந்த எனது பிறப்பிடமான அளவெட்டி கிராமத்திற்கு இழுத்து வாழ்வுச் சக்கரங்களை சுழற்றின.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வேகம் கண்டது மனித நாகரிகத்தின் பொறியியல் வளர்ச்சி. ஏறத்தாழ எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரங்களின் சுழல் உத்தி முறை மட்பாண்டம், விவசாயம், நெசவுத்தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தின. செக்கு, சூத்திரக் கிணறு - இவை இரண்டையும் எனது பாலர் வயதுக் காலங்களில் கேட்டு, பார்த்து, தொட்டு உணர்ந்து கொண்டேன். குறிப்பாக எனது அப்பு (பாட்டனார்) நீர் பாய்ச்சுவதற்காக இயக்கிய இரு வாளிச் சூத்திரத்தில் - பொழுதுபோக்காக அதன் மேல் ஏறி புகையிரத வண்டியில் நீண்ட தூரம் பயணிப்பதாக எண்ணிப் பயணிக்கையில் சமநிலை தடுமாறி பின்னோக்கி விழுந்த அனுபவங்களும் உண்டு. அப்பு தண்ணி இறைக்கையில் இருமருங்கிலும் அறுகம்புல் நிறைந்த பாத்தியூடாக சலசலவெனப் பாயும் தெளிந்த நீர்- பாத்திகளின் இருமருங்கிலும் செழித்து வளர்ந்த கதலி வாழை, இதர வாழை, பச்சை நாடா, மொந்தன், யானை வாழை, பண்டி வாழை, செவ்வாழைகளின் பக்கவேர்களை வருடிக்கொண்டு மரவள்ளி, வேதாளங்காய், மிளகாய்க் கன்றுகள், கத்திரிக்கன்றுகள் என மரக்கறி செடிகளையும் போயிலைக்கன்றுகளையும் (புகையிலை) ஊர்ந்தடையும். தோட்டத்து கிணற்று நீர் என்றாலே எமக்கு தாகம் மேலெழும். ஆழம் கூடிய அக்கிணற்றின் அடியில் கனிமங்கள் நிறைந்த கற்பாறைகளின் மடியில் தேங்கும் குளிர்ந்த நீரின் சுவையே தனி.
எமது பண்பாட்டில் உழுந்து, பயறு, அரிசி போன்றன தானியங்களை கையின் விசையினால் மாவாக்கப் பயன்படும் கருவியே திருகை என அழைத்தோம், அவையும் சுழல் உத்தியே. திருகையின் தோற்றத்தை கொண்ட, விலங்குகளின் விசை மூலம் இயங்குவதே செக்கு எனும் பருமனான இயந்திரம். இதன் பயன்பாட்டில் எள், தேங்காய், இலுப்பை என்பவற்றிலிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்க பயன்படுத்தினர். எண்ணெய்யை பிரித்தெடுத்த பின் மீதமாகும் சக்கை புண்ணாக்கு, அரப்பு என பெயரிட்டு நமது கிராமங்களில் பயன்பெற்றனர். புண்ணாக்கு - கால்நடைகளுக்கான ஊட்ட உணவும் கூட. அரப்பு - தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தினர்.
சூத்திர இயந்திரம் – இரு வாளிச் சூத்திரம், பலவாளிச் சூத்திரம் எனும் வகைகள் உண்டு. இரு வாளிச்சூத்திரம் சற்று சிக்கலான பொறியியல் முறை. நிலத்தில் பூட்டப்பட்டுள்ள நடு அச்சோடு பிணைக்கப்பட்ட நீளமான இரும்புக் கேடயத்தின் மறுபுறத்தில் புகையிரத வண்டியின் சக்கரத்தின் அளவில் இரண்டு இரும்புச் சக்கரங்கள் முன்னும் பின்னுமாக பொருத்தப்பட்டிருக்கும். சாதாரண கிணற்றிலும் மூன்று மடங்கு விட்டமுள்ள இரும்புத் தண்டவாளத்தில் அவை சுற்றும். கேடயத்தின் நுனியில் மாட்டு வண்டியில் பொருத்துவது போல இரண்டு நாம்பன் மாடுகள் பூட்டி இழுக்க அவை இயங்கும். நடு அச்சோடு பொருத்தி தலைக்கு மேலே குறுக்குவாட்டிற்கு தொங்கும் இரும்புச் சங்கிலிகள் வேறுபல சிறு இரும்புச் சக்கரங்களின் தொழில்நுட்ப உதவிகளுடன் கிணற்றின் சுவரில் இரு கம்பிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு மீற்றறிலும் உயரமான இரு இரும்பு வாளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக நீர் பாய்ச்சல் சாத்தியப்படும்.
மரக் காற்றாலையை தரிசித்து திரும்புகையில் - உல்லாச உணர்வுடன் பலர் குதூகலித்தவர்களாக தத்தமது வாகனங்களை நோக்கித் திரும்புகையில், நானும் மலர்ச்சியுடன் முதிர் காதலர்களுடன் சினேக உரையாடல் இயல்பாக மலர்ந்தது. அவர்கள் அப்பிரதேசத்தை நன்கு அறிதவர்களாகையால் சூழவுள்ள வேறுபல விடயங்களையும் விளக்கினர். அவற்றில் ஒன்று என்னை ஈர்த்தது. பூகோளத்தின் வடபிராந்தியங்களிலிருந்து தென்பிராந்தியங்களுக்கு குறிப்பாக ஆபிரிக்க செல்லும் சாம்பல் நிற கருப்பு வால் கூழைக்கடா அல்லது கருவால் பெருங்கோக்கு Grue cendrée குழுமமாக 'த்றுவாவின்' பக்கத்துக்கு பிரதேசத்தில் அமைந்த இயற்கையான "லாக் து ஓரியான்ட் - Lac d'Orient" எனும் பெரிய வாவியில் தங்கிச்செல்கின்றன. வருடத்திற்கு 25 000கு மேற்பட்ட புட்கள் தங்கிச்செல்வதாக கூறினார் முதிர்ந்த அக்காதலர்கள், புருவம் உயர்த்தினேன் பட்சிகள் மீது காதல்கொண்டு. ஐரோப்பாவின் முக்கிய வேடந்தாங்கல்களில் ஒன்றாக 'ஓரியான்ட்' திகழ்வதால் கண்டுகளித்திட வேண்டுமென களிப்புற்றேன். நாளை அதிகாலை பாரிஸ் திரும்புவதான திட்டம் - புட்களை சந்தித்த பின் நாளை இரவு திருப்புவதாக உத்தேசித்தேன். குளிர்காலத்தில் இடம் மாறும் ஒன்றரை மீற்றர் உயரமுள்ள அந்த புட்களின் கரகரப்பான சத்தம் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை கேட்கின்றன. புட்களை இடைஞ்சல் உறுத்தாமல் மறைந்திருந்து கூர்ந்து கவனிக்க வாவியைச்சுழ பல மரவீடுகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில இரவுகள் தங்கி தெற்கு செல்லும் புட்கள் வாவியை சூழவுள்ள விவசாய நிலங்களில் எஞ்சியவையையும் மற்றும் வாவியை சூழ்ந்த உணவுகளையும் உண்டு ஒற்றைக்காலில் வாவியில் உறங்குகின்றன. கூட்டம் கூட்டமாக ஒருபுறம் வடகிலிருந்து வந்தவண்ணம். ஏற்கனவே சிலதினங்களுக்கு முன் வந்தவை கூட்டம் கூட்டமாக தெற்கு நோக்கும். இவற்றை வேட்டையாட குள்ளநரிகளும் ஆங்காங்கே. வெகுதூரங்களில் இருந்து வரும் புகைப்பட கலைஞர்களுக்கும் நல்ல வேட்டைதான். இயற்கையில் ஈர்ப்பு கொண்ட எனக்கு அன்றைய தினம் ஆனந்தம். எனது Migration "இடம்பெயர்வு" என்ற ஓவிய தொடருக்கு நல்ல தீனி - "பறவைகள் அவதானிப்பு" Observation des oiseaux.
உயிர்ச்சங்கிலி உயிர் வாழும் அப்பெருங்குளத்தை சுற்றியே ஒருநாள் கழிய - அந்தி சாய நாரைகள் வாவி நோக்க - இருள் சூழ, நான் வீடு நோக்கினேன். பிரதான ஐந்து வழிச்சாலையில் 130 கி.மீ. வேகத்தில் மகிழுந்து பாரிஸை நோக்கி விரைந்து கொண்டிருக்க "த்றுவா" வின் நினைவுகளில் மூழ்கியது மனம் - சிறகடித்தபடி.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வேகம் கண்டது மனித நாகரிகத்தின் பொறியியல் வளர்ச்சி. ஏறத்தாழ எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரங்களின் சுழல் உத்தி முறை மட்பாண்டம், விவசாயம், நெசவுத்தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தின. செக்கு, சூத்திரக் கிணறு - இவை இரண்டையும் எனது பாலர் வயதுக் காலங்களில் கேட்டு, பார்த்து, தொட்டு உணர்ந்து கொண்டேன். குறிப்பாக எனது அப்பு (பாட்டனார்) நீர் பாய்ச்சுவதற்காக இயக்கிய இரு வாளிச் சூத்திரத்தில் - பொழுதுபோக்காக அதன் மேல் ஏறி புகையிரத வண்டியில் நீண்ட தூரம் பயணிப்பதாக எண்ணிப் பயணிக்கையில் சமநிலை தடுமாறி பின்னோக்கி விழுந்த அனுபவங்களும் உண்டு. அப்பு தண்ணி இறைக்கையில் இருமருங்கிலும் அறுகம்புல் நிறைந்த பாத்தியூடாக சலசலவெனப் பாயும் தெளிந்த நீர்- பாத்திகளின் இருமருங்கிலும் செழித்து வளர்ந்த கதலி வாழை, இதர வாழை, பச்சை நாடா, மொந்தன், யானை வாழை, பண்டி வாழை, செவ்வாழைகளின் பக்கவேர்களை வருடிக்கொண்டு மரவள்ளி, வேதாளங்காய், மிளகாய்க் கன்றுகள், கத்திரிக்கன்றுகள் என மரக்கறி செடிகளையும் போயிலைக்கன்றுகளையும் (புகையிலை) ஊர்ந்தடையும். தோட்டத்து கிணற்று நீர் என்றாலே எமக்கு தாகம் மேலெழும். ஆழம் கூடிய அக்கிணற்றின் அடியில் கனிமங்கள் நிறைந்த கற்பாறைகளின் மடியில் தேங்கும் குளிர்ந்த நீரின் சுவையே தனி.
எமது பண்பாட்டில் உழுந்து, பயறு, அரிசி போன்றன தானியங்களை கையின் விசையினால் மாவாக்கப் பயன்படும் கருவியே திருகை என அழைத்தோம், அவையும் சுழல் உத்தியே. திருகையின் தோற்றத்தை கொண்ட, விலங்குகளின் விசை மூலம் இயங்குவதே செக்கு எனும் பருமனான இயந்திரம். இதன் பயன்பாட்டில் எள், தேங்காய், இலுப்பை என்பவற்றிலிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்க பயன்படுத்தினர். எண்ணெய்யை பிரித்தெடுத்த பின் மீதமாகும் சக்கை புண்ணாக்கு, அரப்பு என பெயரிட்டு நமது கிராமங்களில் பயன்பெற்றனர். புண்ணாக்கு - கால்நடைகளுக்கான ஊட்ட உணவும் கூட. அரப்பு - தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தினர்.
சூத்திர இயந்திரம் – இரு வாளிச் சூத்திரம், பலவாளிச் சூத்திரம் எனும் வகைகள் உண்டு. இரு வாளிச்சூத்திரம் சற்று சிக்கலான பொறியியல் முறை. நிலத்தில் பூட்டப்பட்டுள்ள நடு அச்சோடு பிணைக்கப்பட்ட நீளமான இரும்புக் கேடயத்தின் மறுபுறத்தில் புகையிரத வண்டியின் சக்கரத்தின் அளவில் இரண்டு இரும்புச் சக்கரங்கள் முன்னும் பின்னுமாக பொருத்தப்பட்டிருக்கும். சாதாரண கிணற்றிலும் மூன்று மடங்கு விட்டமுள்ள இரும்புத் தண்டவாளத்தில் அவை சுற்றும். கேடயத்தின் நுனியில் மாட்டு வண்டியில் பொருத்துவது போல இரண்டு நாம்பன் மாடுகள் பூட்டி இழுக்க அவை இயங்கும். நடு அச்சோடு பொருத்தி தலைக்கு மேலே குறுக்குவாட்டிற்கு தொங்கும் இரும்புச் சங்கிலிகள் வேறுபல சிறு இரும்புச் சக்கரங்களின் தொழில்நுட்ப உதவிகளுடன் கிணற்றின் சுவரில் இரு கம்பிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு மீற்றறிலும் உயரமான இரு இரும்பு வாளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக நீர் பாய்ச்சல் சாத்தியப்படும்.
மரக் காற்றாலையை தரிசித்து திரும்புகையில் - உல்லாச உணர்வுடன் பலர் குதூகலித்தவர்களாக தத்தமது வாகனங்களை நோக்கித் திரும்புகையில், நானும் மலர்ச்சியுடன் முதிர் காதலர்களுடன் சினேக உரையாடல் இயல்பாக மலர்ந்தது. அவர்கள் அப்பிரதேசத்தை நன்கு அறிதவர்களாகையால் சூழவுள்ள வேறுபல விடயங்களையும் விளக்கினர். அவற்றில் ஒன்று என்னை ஈர்த்தது. பூகோளத்தின் வடபிராந்தியங்களிலிருந்து தென்பிராந்தியங்களுக்கு குறிப்பாக ஆபிரிக்க செல்லும் சாம்பல் நிற கருப்பு வால் கூழைக்கடா அல்லது கருவால் பெருங்கோக்கு Grue cendrée குழுமமாக 'த்றுவாவின்' பக்கத்துக்கு பிரதேசத்தில் அமைந்த இயற்கையான "லாக் து ஓரியான்ட் - Lac d'Orient" எனும் பெரிய வாவியில் தங்கிச்செல்கின்றன. வருடத்திற்கு 25 000கு மேற்பட்ட புட்கள் தங்கிச்செல்வதாக கூறினார் முதிர்ந்த அக்காதலர்கள், புருவம் உயர்த்தினேன் பட்சிகள் மீது காதல்கொண்டு. ஐரோப்பாவின் முக்கிய வேடந்தாங்கல்களில் ஒன்றாக 'ஓரியான்ட்' திகழ்வதால் கண்டுகளித்திட வேண்டுமென களிப்புற்றேன். நாளை அதிகாலை பாரிஸ் திரும்புவதான திட்டம் - புட்களை சந்தித்த பின் நாளை இரவு திருப்புவதாக உத்தேசித்தேன். குளிர்காலத்தில் இடம் மாறும் ஒன்றரை மீற்றர் உயரமுள்ள அந்த புட்களின் கரகரப்பான சத்தம் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை கேட்கின்றன. புட்களை இடைஞ்சல் உறுத்தாமல் மறைந்திருந்து கூர்ந்து கவனிக்க வாவியைச்சுழ பல மரவீடுகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில இரவுகள் தங்கி தெற்கு செல்லும் புட்கள் வாவியை சூழவுள்ள விவசாய நிலங்களில் எஞ்சியவையையும் மற்றும் வாவியை சூழ்ந்த உணவுகளையும் உண்டு ஒற்றைக்காலில் வாவியில் உறங்குகின்றன. கூட்டம் கூட்டமாக ஒருபுறம் வடகிலிருந்து வந்தவண்ணம். ஏற்கனவே சிலதினங்களுக்கு முன் வந்தவை கூட்டம் கூட்டமாக தெற்கு நோக்கும். இவற்றை வேட்டையாட குள்ளநரிகளும் ஆங்காங்கே. வெகுதூரங்களில் இருந்து வரும் புகைப்பட கலைஞர்களுக்கும் நல்ல வேட்டைதான். இயற்கையில் ஈர்ப்பு கொண்ட எனக்கு அன்றைய தினம் ஆனந்தம். எனது Migration "இடம்பெயர்வு" என்ற ஓவிய தொடருக்கு நல்ல தீனி - "பறவைகள் அவதானிப்பு" Observation des oiseaux.
உயிர்ச்சங்கிலி உயிர் வாழும் அப்பெருங்குளத்தை சுற்றியே ஒருநாள் கழிய - அந்தி சாய நாரைகள் வாவி நோக்க - இருள் சூழ, நான் வீடு நோக்கினேன். பிரதான ஐந்து வழிச்சாலையில் 130 கி.மீ. வேகத்தில் மகிழுந்து பாரிஸை நோக்கி விரைந்து கொண்டிருக்க "த்றுவா" வின் நினைவுகளில் மூழ்கியது மனம் - சிறகடித்தபடி.
"காக்கைச் சிறகினிலே" சஞ்சிகை
இலக்கிய மாத இதழ்
ஏப்ரல் 2019 V.P. வாசுகன்
www.vasuhan.com
இலக்கிய மாத இதழ்
ஏப்ரல் 2019 V.P. வாசுகன்
www.vasuhan.com
|
பிரான்சு வாழ் புலம்பெயர் ஓவியர் VP வாசுகன்
இலங்கையில் பிறந்த வாசுகன் பிரான்சு வாழ் புலம்பெயர் அடுத்த தலைமுறைத் தமிழர். இவர் தொடர்ந்து இயங்கும் ஓர் ஓவியர். தனது ஓவியக்கண்காட்சிகளை பிரான்சு, சைப்பிரஸ், ஜப்பான் எனப்பல்வேறு நாடுகளில் நடாத்தி வருபவர். தவிர ஆசிய, ஐரோப்பா, வட அமெரிக்கா என இரசனைத்தேடல் சுற்றுலா செய்து வருபவர். அழகியல் தேடலுடன் உலாவும் இளைய தலைமுறையினரது நாட்காட்டிப் பதிவுகளில் ஒன்றுதான் இந்த ஆக்கம். இத்தகைய இளைய தலைமுறையினரது நோக்கில் நேரடியாக தமிழில் வெளிப்படும் ஆக்கங்கள் தொடர்பாக காக்கை கரிசனை கொள்கிறது. இந்த ஆக்கம் கூகிள் வழங்கிய ‘குரல் உணரி எழுத்துச் செயலி’ தந்த ஒலிப்பதிவான் ஊடாகத் தட்டச் செழுத்தாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் V.P. வாசுகன். இன்று நான்காம் தமிழாக – கணினித் தமிழ் வலம்வருதன் சான்றாக கணினி மென்பொருள்வழியில் தட்டச்சாகிய இக்கட்டுரையை நோக்கலாம். இத்தகைய நவீன தமிழ்செயலித் தொழில்நுட்பங்களை வழங்கும் அனைத்து ஆற்றலாளர்களுக்கும் காக்கை குழுமம் நன்றி தெரிவிக்கிறது. காக்கைச் சிறகினிலே ஏப்ரல் 2019 |